அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அள்ளாஹ்வுக்கே புகழனைத்தும் அல்-ஹம்துலில்லாஹ்.
இலங்கையை பொறுத்த வரைக்கும் அரச பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட வேண்டும் என்பது ஒரு சட்டமாக இருக்கலாம்.
இலங்கையை பொறுத்த வரைக்கும் அரச பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட வேண்டும் என்பது ஒரு சட்டமாக இருக்கலாம்.
இப்படியான இல்ல விளையாட்டுக்கள் பெரும்பாலான பாடசாலைளிலும் நடந்து கொண்டே இருக்கிறது. என்பதையும் எம்மால் அறிய முடிகிறது. இதில் தடையில்லை.
இருந்தாலும் இப்படியான விளையாட்டு நிகழ்சிகள் முஸ்லிம் பாடசாலைகளில் நடைபெறும் போது ஏனைய மத பாடசாலைகளில் நடைபெறுவது போன்று நடைபெற முடியாது.
காரணம்? நாம் முஸ்லிம்கள் நமக்கு நமது மார்க்கம் சொல்லும் வழிமுறைகள் என்ற ஒன்று இருக்கிறது. அவைகளை நாம் பின்பற்றாமல் எப்படி அந்நிய கலாச்சாரங்களை பின்பற்ற முடியும்?
சிலர்கள் அரச பாடசாலை அல்லது பௌத்த நாடு முஸ்லிம்கள் நினைத்தது போன்று செய்ய முடியாது என்று கண்மூடித்தனமாக சொல்லலாம். ஆனால் அதற்குரிய வழிமுறையை வகுத்தது யார்?
அப்படிப்பார்த்தால், நாம் எப்படி பர்தா அணிகின்றோம்? தொப்பி போடுகின்றோம்? பௌத்த நாடு என்று தானே சொல்கிறோம்!
இவைகளெல்லாம் போலிக் காரணங்கள்.
விடயத்துக்கு வருகிறேன்.
அதாவது நான்கைந்து நாளாக நடைபெற்றுவரும் இந்த அஸ்ஸறாஜ் மகா வித்தியாலயத்தின் (மத்திய முகாம்) இல்ல விளையாட்டுப் போட்டி முழுக்க முழுக்க இஸ்லாமிய வரையறையை விட்டும் வெளியேறிவிட்டது.
இவற்றை எதனை வைத்த சொல்கின்றேன் என்றால்.
1. தொழுகை வீணடிக்கப்பட்டது:
தொழுகையைப் பொறுத்தவரை நமக்கு தெரியும் அது முஸ்லிமின் அடையாளம். ஆனால் ஏற்கனவே அதிகமான மக்கள் தொழுவதில்லை இங்கு வழமையாக தொழுதுவந்த மக்களும் தொழுகையை வீணடித்தார்கள். தொழுகை நேரத்தில் இடைவெளி கொடுக்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு கட்டுப்படும் மாணவர்களும் அந்த விடயத்தில் பாராமுகமாக இருந்து விட்டார்கள். தொழுகின்ற நேரத்திலும் இடைஞ்சலாக இருந்ததாக மக்கள் புகார்.
இப்படி இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகை புறக்கணிக்கப்பட்டது. எந்தளவுக்கெனில் அஸரிலிருந்து சூடுபிடித்த இந்த விளையாட்டு இஷா வரைக்கும் அலட்சியம் செய்தது.
2. ஆண், பெண் கலப்பு:
ஆண், பெண் கலப்பு இஸ்லாத்தில் ஹறாம். அள்ளாஹ், விபச்சாரத்தை நெருங்க வேண்டாம் என்று சொல்கிறான். இப்படி சட்டம் இருக்க அபாயாவுடனும் தொப்பிகளுடனும் நமது முஸ்லிம்கள் ஆங்காங்கே ஆண், பெண் என கூட்டங்கூட்டமாக ஒன்று விட்டொன்றாக நின்றார்கள்.
இவ்வளவு பெரிய விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்தவர்கள் ஏன் ஆண்கள் பெண்களுக்கென தனித்தனி இடம் ஒதுக்கவில்லை?
3. இசை:
இசை இஸ்லாத்தில் ஹறாம். இது இல்ல விளையாட்டுப்போட்டியா? இசை நிகழ்ச்சியா? என்று கூட பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இசை தலைவிரித்தாடியது. எந்த நேரமும் இசையும் பாட்டும் கும்மாளமுமாகத்தான் இருந்தது. முஸ்லிம்களுக்கும் மாற்று மதத்தவர்களக்கும் எந்த வித்தியாசமும் அங்கு இருக்கவில்லை.
ஏன் இவைகளை தவிர்க்கவில்லை? இசை இல்லாவிட்டால் அரசாங்கம் கண்டித்துத்தான் விடுமா?
ஏன் நமது புனித இஸ்லாத்தை கொச்சைப்படுத்துகிறோம்?
இன்னுமொரு விடயத்தையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும்.
அதாவது அஸ்ஸிறாஜ் பாடசாலையை பொறுத்தவரை அள்ளாஹ்வின் உதவியடன் அங்குள்ள மௌலவி ஆசிரியர்கள் சில விடயங்களை இஸ்லாத்திற்கு எடுத்தார்கள்.
அவை:
1. பாடசாலை நிறைவடையும் போது அன்று தொட்டு சொல்லப்பட்டு வந்த ஸலவாத்தில் மாற்றம்.
2.வழிகெட்ட ஷீஆக்களால் ஏற்படுத்தப்பட்ட மீலாது விழாவுக்கு தடை .
3.ஆண், பெண் கலந்த வகுப்புகள் பிரிப்பு.
என பல விடயங்களை மாற்றிய இவர்கள் ஏன் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை?
அப்படி கவனம் செலுத்தியும் முடியவில்லையென்றாகிவிட்டால் ஏன் அதனை புறக்கணிக்கவில்லை?
அனைவரும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
நானும் அந்த விழாவை பார்வையிட சென்றிருந்தேன் அங்குள்ள நிலைமையை பார்த்தவுடன் திரும்பி விட்டேன் .
ஏற்கனவே நான் அந்த விழாவின் படங்களை பதிவதாக சொன்னேன். ஆனால் இந்த கட்டுரை என்னை அதற்கு விடவில்லை.
இதற்குப்பிறகாவது இப்படியான அனாச்சாரங்கள் நடக்காமல் இருக்க முயற்சிப்போமாக! எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக.!
ஆமீன்!
-றாஸிம் (ஸஹ்வி)
இருந்தாலும் இப்படியான விளையாட்டு நிகழ்சிகள் முஸ்லிம் பாடசாலைகளில் நடைபெறும் போது ஏனைய மத பாடசாலைகளில் நடைபெறுவது போன்று நடைபெற முடியாது.
காரணம்? நாம் முஸ்லிம்கள் நமக்கு நமது மார்க்கம் சொல்லும் வழிமுறைகள் என்ற ஒன்று இருக்கிறது. அவைகளை நாம் பின்பற்றாமல் எப்படி அந்நிய கலாச்சாரங்களை பின்பற்ற முடியும்?
சிலர்கள் அரச பாடசாலை அல்லது பௌத்த நாடு முஸ்லிம்கள் நினைத்தது போன்று செய்ய முடியாது என்று கண்மூடித்தனமாக சொல்லலாம். ஆனால் அதற்குரிய வழிமுறையை வகுத்தது யார்?
அப்படிப்பார்த்தால், நாம் எப்படி பர்தா அணிகின்றோம்? தொப்பி போடுகின்றோம்? பௌத்த நாடு என்று தானே சொல்கிறோம்!
இவைகளெல்லாம் போலிக் காரணங்கள்.
விடயத்துக்கு வருகிறேன்.
அதாவது நான்கைந்து நாளாக நடைபெற்றுவரும் இந்த அஸ்ஸறாஜ் மகா வித்தியாலயத்தின் (மத்திய முகாம்) இல்ல விளையாட்டுப் போட்டி முழுக்க முழுக்க இஸ்லாமிய வரையறையை விட்டும் வெளியேறிவிட்டது.
இவற்றை எதனை வைத்த சொல்கின்றேன் என்றால்.
1. தொழுகை வீணடிக்கப்பட்டது:
தொழுகையைப் பொறுத்தவரை நமக்கு தெரியும் அது முஸ்லிமின் அடையாளம். ஆனால் ஏற்கனவே அதிகமான மக்கள் தொழுவதில்லை இங்கு வழமையாக தொழுதுவந்த மக்களும் தொழுகையை வீணடித்தார்கள். தொழுகை நேரத்தில் இடைவெளி கொடுக்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு கட்டுப்படும் மாணவர்களும் அந்த விடயத்தில் பாராமுகமாக இருந்து விட்டார்கள். தொழுகின்ற நேரத்திலும் இடைஞ்சலாக இருந்ததாக மக்கள் புகார்.
இப்படி இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகை புறக்கணிக்கப்பட்டது. எந்தளவுக்கெனில் அஸரிலிருந்து சூடுபிடித்த இந்த விளையாட்டு இஷா வரைக்கும் அலட்சியம் செய்தது.
2. ஆண், பெண் கலப்பு:
ஆண், பெண் கலப்பு இஸ்லாத்தில் ஹறாம். அள்ளாஹ், விபச்சாரத்தை நெருங்க வேண்டாம் என்று சொல்கிறான். இப்படி சட்டம் இருக்க அபாயாவுடனும் தொப்பிகளுடனும் நமது முஸ்லிம்கள் ஆங்காங்கே ஆண், பெண் என கூட்டங்கூட்டமாக ஒன்று விட்டொன்றாக நின்றார்கள்.
இவ்வளவு பெரிய விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்தவர்கள் ஏன் ஆண்கள் பெண்களுக்கென தனித்தனி இடம் ஒதுக்கவில்லை?
3. இசை:
இசை இஸ்லாத்தில் ஹறாம். இது இல்ல விளையாட்டுப்போட்டியா? இசை நிகழ்ச்சியா? என்று கூட பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இசை தலைவிரித்தாடியது. எந்த நேரமும் இசையும் பாட்டும் கும்மாளமுமாகத்தான் இருந்தது. முஸ்லிம்களுக்கும் மாற்று மதத்தவர்களக்கும் எந்த வித்தியாசமும் அங்கு இருக்கவில்லை.
ஏன் இவைகளை தவிர்க்கவில்லை? இசை இல்லாவிட்டால் அரசாங்கம் கண்டித்துத்தான் விடுமா?
ஏன் நமது புனித இஸ்லாத்தை கொச்சைப்படுத்துகிறோம்?
இன்னுமொரு விடயத்தையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும்.
அதாவது அஸ்ஸிறாஜ் பாடசாலையை பொறுத்தவரை அள்ளாஹ்வின் உதவியடன் அங்குள்ள மௌலவி ஆசிரியர்கள் சில விடயங்களை இஸ்லாத்திற்கு எடுத்தார்கள்.
அவை:
1. பாடசாலை நிறைவடையும் போது அன்று தொட்டு சொல்லப்பட்டு வந்த ஸலவாத்தில் மாற்றம்.
2.வழிகெட்ட ஷீஆக்களால் ஏற்படுத்தப்பட்ட மீலாது விழாவுக்கு தடை .
3.ஆண், பெண் கலந்த வகுப்புகள் பிரிப்பு.
என பல விடயங்களை மாற்றிய இவர்கள் ஏன் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை?
அப்படி கவனம் செலுத்தியும் முடியவில்லையென்றாகிவிட்டால் ஏன் அதனை புறக்கணிக்கவில்லை?
அனைவரும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
நானும் அந்த விழாவை பார்வையிட சென்றிருந்தேன் அங்குள்ள நிலைமையை பார்த்தவுடன் திரும்பி விட்டேன் .
ஏற்கனவே நான் அந்த விழாவின் படங்களை பதிவதாக சொன்னேன். ஆனால் இந்த கட்டுரை என்னை அதற்கு விடவில்லை.
இதற்குப்பிறகாவது இப்படியான அனாச்சாரங்கள் நடக்காமல் இருக்க முயற்சிப்போமாக! எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக.!
ஆமீன்!
-றாஸிம் (ஸஹ்வி)