கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து முற்றாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் பெயரில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு மிரட்டல் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இக்கடிதம் கடந்த மாதம் 25ஆம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. எனினும், சர்ச்சைக்குரிய இந்த கடிதம் குறித்த தகவல்கள் தற்போதே வெளியாகியுள்ளன. இந்த கடிதத்தின் பிரதிகள் நவமணிக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் என்ற பெயரில் குறித்த மிரட்டல் கடிதம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் கணக்காளருக்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரான அன்வர்டீன் என்பவரும் சேர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கும், கூடுதலான முஸ்லிம் ஊழியர்களையும், தலைமை உத்தியோகத்தர்களையும் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.
இவ்வாறான நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி உங்களுக்கு உரித்தான கடமைகளில் மட்டும் ஈடுபடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதம் தொடர்பாக கடிதம் கிடைக்கப்பெற்ற கணக்காளர் சவளக்கடை பொலிஸில் நிலையத்தில் முறப்பாடு செய்துள்ளார். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-navamani.lkம
இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் என்ற பெயரில் குறித்த மிரட்டல் கடிதம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் கணக்காளருக்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரான அன்வர்டீன் என்பவரும் சேர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கும், கூடுதலான முஸ்லிம் ஊழியர்களையும், தலைமை உத்தியோகத்தர்களையும் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.
இவ்வாறான நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி உங்களுக்கு உரித்தான கடமைகளில் மட்டும் ஈடுபடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதம் தொடர்பாக கடிதம் கிடைக்கப்பெற்ற கணக்காளர் சவளக்கடை பொலிஸில் நிலையத்தில் முறப்பாடு செய்துள்ளார். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-navamani.lkம