மத்திய பர்மா பிராந்தியத்தில் நடந்துவருகின்ற இனவன்முறைகளின் தொடர்ச்சியாக, அங்கு பள்ளிவாசலொன்றை கும்பலொன்று அடித்துநொறுக்கியுள்ளது.
தாட்கோன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல்மீது சுமார் 20 பேர்கொண்ட கும்பலொன்றே தாக்குதல் நடத்தியுள்ளது.
தாட்கோன் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல்மீது சுமார் 20 பேர்கொண்ட கும்பலொன்றே தாக்குதல் நடத்தியுள்ளது.
அதனைத்தொடர்ந்து, இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இந்த இடத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மெய்க்டிலா பிரதேசத்திலேயே கடந்த வாரத்தில் இரண்டு நாட்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
பௌத்த மதத்தவர்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையில் அங்கு வன்முறைகள் நடந்துவருகின்றன.
அந்தப் பிரதேசங்களை அண்டிய பல கிராமங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன.
ஆயிரக்கணக்கான மக்கள் குடிமனைகளை இழந்துள்ளார்கள்.
பல தலைமுறைகளாக அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்களே இம்முறை வன்முறைகளுக்கு இலக்காகியுள்ளனர்.
வன்முறைகள் மீண்டும் வெடிக்காதவாறு நடவடிக்கை எடுப்பதற்காக அதிபர் தெயின் செயினும் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சியும் ஞாயி்ற்றுக் கிழமை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
BBC
இந்த இடத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மெய்க்டிலா பிரதேசத்திலேயே கடந்த வாரத்தில் இரண்டு நாட்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
பௌத்த மதத்தவர்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையில் அங்கு வன்முறைகள் நடந்துவருகின்றன.
அந்தப் பிரதேசங்களை அண்டிய பல கிராமங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன.
ஆயிரக்கணக்கான மக்கள் குடிமனைகளை இழந்துள்ளார்கள்.
பல தலைமுறைகளாக அந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்களே இம்முறை வன்முறைகளுக்கு இலக்காகியுள்ளனர்.
வன்முறைகள் மீண்டும் வெடிக்காதவாறு நடவடிக்கை எடுப்பதற்காக அதிபர் தெயின் செயினும் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சியும் ஞாயி்ற்றுக் கிழமை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
BBC