ஹலால் சான்றிதழ் விவகாரத்தை பொதுபலசேனா இன்று ஒரு தேசிய பிரச்சினையாக மாற்றி விட்டது. இதுவரை காலமும் பொதுபலசேனாவுக்கு மாத்திரம் பிரச்சினையாகவிருந்த ஹலால் சான்றிதழ் இன்று நாட்டின் உயர் மட்டத் தலைவர்களுக்குக் கூட பிரச்சினையாகத் தெரிவது ஏன் என்பது தான் புரியவில்லை.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது கூட ஹலால் விவகாரம் தொடர்பில் அதிகம் பேச ப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கூட ஹலால் பிரச்சினைக்குரிய விடயம்தான் எனும் தொ னிப்பட கருத்துவெளியிட்டதாக அமைச்சரவை தகவ ல்கள் தெரிவிக்கின்றன. ஹலாலை தானும் ஒரு பிரச்சினையாகக் கருதியதால் தான் ஜனாதிபதி அமைச்சரவை உப குழு ஒன்றை அமைத்து இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டிருக்கிறார்.
மறுபுறம் ஹலால் சான்றிதழ் முஸ்லிமல்லாதோரைப் பாதிக்காதவாறு எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பில் முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் உலமா சபையிடம் கேட்டிருக்கிறார். அத்துடன் உலமா சபை பிரதிநிதிகள் அமைச்சரவை உப குழு முன் தோன்றி ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹலால் சான்றிதழ் ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை உறுதி செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க தான பங்களிப்பை வகிக்கிறதே தவிர ஒரு போதும் நாட்டையோ நாட்டு மக்களையோ எந்த விதத்திலும் பாதிப்படையச் செய்யவில்லை என்பதே யதார்த்தமாகும். ஆனால் இந்த உண்மையை விளங்க மறுக்கும் சக்திகளின் வரட்டு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தலைசாய்த்து அதற்காக அமைச்சரவையைக்கூட்டி குழுக்களை அமைத்து கலந்துரையாடுவதன் பின்னணி என்ன என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.
அநுராதபுரத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி தர்கா ஒன்றைத் தகர்த்தெறிந்த போதோ, தம்புள்ளை பள்ளிவாசலுக்குள் புகுந்து தொழுகையை நிறுத்தி அடாவடித்தனம் புரிந்தபோதோ கூடாத அமைச்சரவை இப்போது ஹலால் விவகாரத்தை மையமாகக் கொண்டு கூடிப் பேசுவதானது இந்த நாட்டில் வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களின் நலன்களை விடவும் இருநூறு பேருக்கும் குறைவானோரை அங்கத்தவர்களாகக் கொண்ட பொதுபலசேனாவின் நலன்கள் முக்கியம் வாய்ந்தது எனக் கருதியதாலா?
முன்னரும் நாம் பல தடவைகள் வலியுறுத்தியதைப் போன்று அரசாங்கம் பெளத்த பிக்குகள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களது கோரிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அனைத்திற்கும் தலைவணங்குவது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
சர்வதேச நாடுகள் பலவற்றிலும் இன்று மத முரண்பாடுகள் காரணமாக உள்நாட்டுப் போர்கள் வெடித்து தினமும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். சோமாலியாவும் நைஜீரியாவும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.மியான்மாரில் கூட இன்று முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்படுவதற்கு பெளத்த மத மேலாதிக்கமே காரணம் என்பதை எல்லோரும் அறிவர்.
இலங்கையிலும் பெளத்த மதத்தை மேலோங்கச் செய்து ஏனைய மதங்களை தமது விரல் நுனியில் வைத்து ஆட்டுவிக்கவேண்டும் என்பதே பொதுபலசேனா உள்ளிட்ட பெளத்த கடும் போக்கு சக்திகளின் இலக்காகும். அதன் முதற்படியாகவே அவர்கள் ஹலால் எனும் துரும்பை கையிலெடுத்திருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இந்த நாட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் பொதுபலசேனா இந்த நாட்டில் ஏனைய மதங்களை இலக்கு வைத்து தனது வேலைத்திட்டங்களை மேலும் விஸ்தரிக்கப்போகிறது என்பது மட்டும் திண்ணம். இதற்கு அரசாங்கம் இன்று போல் என்றும் துணையாக இருக்குமானால் இந்த நாடு இன்னுமொரு நைஜீரியாவாகவோ சோமாலியாவாகவோ மியான்மாராகவோ மாற்றம் பெறலாம்.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவதா? அல்லது மேற்சொன்ன நாடுகளாக்குவதா? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்திடமே இருக்கிறது.
ஹலால் விடயத்தை உலமா சபையின் கண்காணிப்பில் அரசாங்க நிறுவனம் ஒன்றின் கீழ் கொண்டுவருவது பற்றிச் சிந்திக்கலாம். ஆனால் அதனை இடைநிறுத்துவது பற்றியோ அல்லது பொது பல சேனாவின் கோரிக்கைகளுக்கு இணங்குவது பற்றியோ உலமா சபை ஒருபோதும் சிந்திக்கக் கூடாது. அவ்வாறு நடந்தால் அது பெளத்த பேரினவாதிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக அமைந்துவிடும்.
-நன்றி விடிவெள்ளி
மறுபுறம் ஹலால் சான்றிதழ் முஸ்லிமல்லாதோரைப் பாதிக்காதவாறு எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பில் முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் உலமா சபையிடம் கேட்டிருக்கிறார். அத்துடன் உலமா சபை பிரதிநிதிகள் அமைச்சரவை உப குழு முன் தோன்றி ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹலால் சான்றிதழ் ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை உறுதி செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க தான பங்களிப்பை வகிக்கிறதே தவிர ஒரு போதும் நாட்டையோ நாட்டு மக்களையோ எந்த விதத்திலும் பாதிப்படையச் செய்யவில்லை என்பதே யதார்த்தமாகும். ஆனால் இந்த உண்மையை விளங்க மறுக்கும் சக்திகளின் வரட்டு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தலைசாய்த்து அதற்காக அமைச்சரவையைக்கூட்டி குழுக்களை அமைத்து கலந்துரையாடுவதன் பின்னணி என்ன என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.
அநுராதபுரத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி தர்கா ஒன்றைத் தகர்த்தெறிந்த போதோ, தம்புள்ளை பள்ளிவாசலுக்குள் புகுந்து தொழுகையை நிறுத்தி அடாவடித்தனம் புரிந்தபோதோ கூடாத அமைச்சரவை இப்போது ஹலால் விவகாரத்தை மையமாகக் கொண்டு கூடிப் பேசுவதானது இந்த நாட்டில் வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களின் நலன்களை விடவும் இருநூறு பேருக்கும் குறைவானோரை அங்கத்தவர்களாகக் கொண்ட பொதுபலசேனாவின் நலன்கள் முக்கியம் வாய்ந்தது எனக் கருதியதாலா?
முன்னரும் நாம் பல தடவைகள் வலியுறுத்தியதைப் போன்று அரசாங்கம் பெளத்த பிக்குகள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களது கோரிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அனைத்திற்கும் தலைவணங்குவது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
சர்வதேச நாடுகள் பலவற்றிலும் இன்று மத முரண்பாடுகள் காரணமாக உள்நாட்டுப் போர்கள் வெடித்து தினமும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். சோமாலியாவும் நைஜீரியாவும் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.மியான்மாரில் கூட இன்று முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்படுவதற்கு பெளத்த மத மேலாதிக்கமே காரணம் என்பதை எல்லோரும் அறிவர்.
இலங்கையிலும் பெளத்த மதத்தை மேலோங்கச் செய்து ஏனைய மதங்களை தமது விரல் நுனியில் வைத்து ஆட்டுவிக்கவேண்டும் என்பதே பொதுபலசேனா உள்ளிட்ட பெளத்த கடும் போக்கு சக்திகளின் இலக்காகும். அதன் முதற்படியாகவே அவர்கள் ஹலால் எனும் துரும்பை கையிலெடுத்திருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் இந்த நாட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் பொதுபலசேனா இந்த நாட்டில் ஏனைய மதங்களை இலக்கு வைத்து தனது வேலைத்திட்டங்களை மேலும் விஸ்தரிக்கப்போகிறது என்பது மட்டும் திண்ணம். இதற்கு அரசாங்கம் இன்று போல் என்றும் துணையாக இருக்குமானால் இந்த நாடு இன்னுமொரு நைஜீரியாவாகவோ சோமாலியாவாகவோ மியான்மாராகவோ மாற்றம் பெறலாம்.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்குவதா? அல்லது மேற்சொன்ன நாடுகளாக்குவதா? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்திடமே இருக்கிறது.
ஹலால் விடயத்தை உலமா சபையின் கண்காணிப்பில் அரசாங்க நிறுவனம் ஒன்றின் கீழ் கொண்டுவருவது பற்றிச் சிந்திக்கலாம். ஆனால் அதனை இடைநிறுத்துவது பற்றியோ அல்லது பொது பல சேனாவின் கோரிக்கைகளுக்கு இணங்குவது பற்றியோ உலமா சபை ஒருபோதும் சிந்திக்கக் கூடாது. அவ்வாறு நடந்தால் அது பெளத்த பேரினவாதிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக அமைந்துவிடும்.
-நன்றி விடிவெள்ளி