மிரிஹான தடுப்பு முகாமில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள, மியன்மார் நாட்டுப்பிரஜைகள் தங்களுடைய நாட்டுக்கு திரும்ப மறுத்துவருவதாக அரசு தெரிவிக்கின்றது.
தமக்கு நாடு திரும்புவதால் உயிரச்சுறுத்தல் உள்ளதாக அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக அரசு மேலும் தெரிவித்தது.
தமக்கு நாடு திரும்புவதால் உயிரச்சுறுத்தல் உள்ளதாக அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக அரசு மேலும் தெரிவித்தது.
குறித்த மியன்மார் பிரஜைகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்து ஆராய்வதற்காக மிரிஹான தடுப்பு முகாமுக்கு சென்ற சட்ட அமுலாக்கல் நிறுவன அதிகாரிகளிடமே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
மியன்மார் பிரஜைகளின் தடுப்புக் காவல் குறித்தும் அவர்களின் நிலைமை குறித்தும் மியன்மார் தூதுவராலயத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் குறித்த தூதரகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறித்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே குறித்த மியன்மார் பிரஜைகளை அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பது குறித்து இன்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வினவப்பட்டது.
குறித்த விடயத்தை அரசு தனது இராஜ தந்திர கொள்கைகளுக்கு அமைவாகவே கையாள்வதாகவும் இது தொடர்பில் மியன்மார் தூதுவராலயத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் மியன்மார் தூதரகம் இது தொடர்பில் தொடர்ந்தும் பராமுகமாக இருக்கும் பட்சத்தில் தமது இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசு சிந்திக்கும் என அவர் மேலும் தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்யா இன முஸ்லிம்கள் பலர் அண்மைக்காலமாக அயல் நாடுகளுக்கு உயிரச்சுறுத்தல் காரணமாக சட்டவிரோத கடற்பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை கடற்பரப்பில் அபாயகரமான நிலையில் மீட்கப்பட்ட 170 மியன்மார் பிரஜைகள் இலங்கையின் தடுப்பு முகாமில் உள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இவர்களில் 50 முதல் 60 க்கு இடைப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது .
-vidivelli.lk
மியன்மார் பிரஜைகளின் தடுப்புக் காவல் குறித்தும் அவர்களின் நிலைமை குறித்தும் மியன்மார் தூதுவராலயத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் குறித்த தூதரகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறித்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே குறித்த மியன்மார் பிரஜைகளை அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பது குறித்து இன்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வினவப்பட்டது.
குறித்த விடயத்தை அரசு தனது இராஜ தந்திர கொள்கைகளுக்கு அமைவாகவே கையாள்வதாகவும் இது தொடர்பில் மியன்மார் தூதுவராலயத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் மியன்மார் தூதரகம் இது தொடர்பில் தொடர்ந்தும் பராமுகமாக இருக்கும் பட்சத்தில் தமது இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசு சிந்திக்கும் என அவர் மேலும் தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்யா இன முஸ்லிம்கள் பலர் அண்மைக்காலமாக அயல் நாடுகளுக்கு உயிரச்சுறுத்தல் காரணமாக சட்டவிரோத கடற்பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இலங்கை கடற்பரப்பில் அபாயகரமான நிலையில் மீட்கப்பட்ட 170 மியன்மார் பிரஜைகள் இலங்கையின் தடுப்பு முகாமில் உள்ளமைக் குறிப்பிடத்தக்கது. இவர்களில் 50 முதல் 60 க்கு இடைப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது .
-vidivelli.lk