கடந்த வருடம் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் ஜெனீவாவில் இருந்து கொண்டிருந்தார்கள். ஏனெனில் இந்த நாட்டு அரசாங்கத்தை வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதனாலாகும்.
ஆனால் இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் உலமா சபையி ன் பிரதிநிதிகளோ கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் பத்திரிகையாளர் மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த நாட்டு முஸ்லிம்களின் மத உரிமையை பெளத்த கடும்போக்கு சக்திகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகும்.
கடந்த வருடம் அரசாங்கம் நிர்க்கதியில் இருந்தபோது உலமா சபை கைகொடுத்து உதவினாலும் இம் முறை உலமா சபை நிர்க்கதிக்குள் தள்ளப்பட்டபோது அரசாங்கம் கைகொடுக்கவில்லை என்பதுதான் கவலைக்குரியதாகும்.
உலமா சபை கடந்த முறை ஜெனீவாவில் இலங்கையின் பெயரைக் காப்பாற்ற மும்முரமாக உழைத்தது என்பதை ஜனாதிபதி பல தடவைகள் சிலாகித்துப் பேசியிருக்கிறார். அண்மையில் உலமா சபையினர் ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்தபோதும் அவர் இதையே கூறினார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதும் உலமா சபையின் உதவியை நினைவூட்டத் தவறவில்லை. ஆனால் இந்த நன்றியுணர்வு வெறும் வார்த்தைகளிலேயே வெளிப்படுகிறது. செயலில் எதையும் காண முடியவில்லை.
தமக்கு உதவி செய்த ஒருவர் நிர்க்கதியில் இருக்கும்போது அவரைத் தேடிச் சென்று தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதுதான் மனிதப் பண்பாகும். ஆனால் உலமா சபைக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் தனித்துவிடப்பட்ட போது அரசாங்கம் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. உலமா சபை அலரி மாளிகைக்கு ஜனாதிபதியைத் தேடிச் சென்று உதவி கேட்டபோதுகூட அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
நாம் இவற்றையெல்லாம் இங்கு நினைவுகூர்வதற்குக் காரணம் அரசாங்கம் ஹலால் சான்றிதழ் உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் மத உரிமை சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் பொடுபோக்கான போக்கையே கடைப்பிடித்து வருகிறது என்பதை உணர்த்துவதற்கேயாகும்.
நமது முஸ்லிம் சரணாகதி அரசியல்வாதிகள் அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ''''பள்ளிவாசல்கள் தாக்கப்படவில்லை... ஸியாரங்களை முஸ்லிம்கள்தான் உடைத்தார்கள்...'''' என பூச்சாண்டி காட்டுகிறார்களே தவிர சமூகத்தின் உரிமையைக் காப்பாற்ற வீதியில் இறங்கவில்லை.
தமக்கு பதவி வேண்டும்... பட்டம் வேண்டும்... சொகுசு வேண்டும்... அமைச்சரவையில் இடம் வேண்டும் ... என்பதற்காக அலரி மாளிகை வாசலில் இரவிரவாகக் காத்துக்கிடக்கும் அரசியல் தலைமைகள் ஹலால் விடயத்தில் மாத்திரம் ஓடி ஒளிந்துவிட்டார்கள். உலமா சபை இதுவரை மூன்று பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்தி ஹலால் பற்றி விளக்கம் சொன்னாலும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையைத் தானும் உருப்படியாக விடவில்லை. ஏனெனில் இது தேர்தல் காலம் அல்லவே.
அமைச்சரவையில் சம்பிக்க ரணவக்க இந்த விடயத்தை பேசினார் என்பதனால்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கு வாய்திறந்தார்கள். இன்றேல் அங்கும் ஹலால் விவகாரம் எடுபட்டிராது. அமைச்சரவை உபகுழுவும் அமைக்கப்பட்டிராது.
ஹலால் சான்றிதழை அரசாங்கமே பொறுப்பேற்று சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும் என உலமா சபை கேட்டுக் கொண்ட போதிலும் பொதுபல சேனா அடங்குவதாக இல்லை.
உலமா சபைக்கு பதிலளிக்கும் வகையில் நேற்றைய தினம் பத்திரிகையாளர் மாநாட்டினை நடத்திய பொதுபல சேனா ''ஹலால்'' என்ற வார்த்தைக்கே இலங்கையில் இடம்கிடையாது என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அத்தோடு நின்றுவிடாது ஷரீஆவின் கீழான முஸ்லிம் தனியார் சட்டம், இஸ்லாமிய வங்கி நிதி முறைமை, காதி நீதிமன்றம் என்பவற்றுக்கும் வேட்டுவைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இலங்கை முஸ்லிம்கள் குட்டக் குட்டக் குனிந்து போவார்கள் என்ற பொதுபல சேனாவின் அதீத நம்பிக்கையே இன்று அவர்கள் இப்படியெல்லாம் பேசுவதற்குக் காரண மாகும். அதற்கு நாமும் காரணமாகிவிட்டோம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இன்று ஹலால் விடயத்தில் இறங்கி வந்தவர்கள் நாளை ஷரீஆ விடயத்திலும் ஹிஜாப் விடயத்திலும் இறங்கி வருவார்கள் என பொதுபல சேனா எதிர்பார்க்குமானால் அது அவர்களது அறியாமையாகும்.
முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக மதிக்கும் இஸ்லாத்தில் கைவைப்பதற்கு எவருக்கும் இடம் கொடுக் க மாட்டார்கள். அவ்வாறான ஒருநிலை வருமானால் இந்தநாட்டின் நிலைமைகள் மிகப் பாரதூரமாகவே அமைந்துவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக.
-vidivelli.lk
கடந்த வருடம் அரசாங்கம் நிர்க்கதியில் இருந்தபோது உலமா சபை கைகொடுத்து உதவினாலும் இம் முறை உலமா சபை நிர்க்கதிக்குள் தள்ளப்பட்டபோது அரசாங்கம் கைகொடுக்கவில்லை என்பதுதான் கவலைக்குரியதாகும்.
உலமா சபை கடந்த முறை ஜெனீவாவில் இலங்கையின் பெயரைக் காப்பாற்ற மும்முரமாக உழைத்தது என்பதை ஜனாதிபதி பல தடவைகள் சிலாகித்துப் பேசியிருக்கிறார். அண்மையில் உலமா சபையினர் ஜனாதிபதியை அலரி மாளிகையில் சந்தித்தபோதும் அவர் இதையே கூறினார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதும் உலமா சபையின் உதவியை நினைவூட்டத் தவறவில்லை. ஆனால் இந்த நன்றியுணர்வு வெறும் வார்த்தைகளிலேயே வெளிப்படுகிறது. செயலில் எதையும் காண முடியவில்லை.
தமக்கு உதவி செய்த ஒருவர் நிர்க்கதியில் இருக்கும்போது அவரைத் தேடிச் சென்று தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதுதான் மனிதப் பண்பாகும். ஆனால் உலமா சபைக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் தனித்துவிடப்பட்ட போது அரசாங்கம் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. உலமா சபை அலரி மாளிகைக்கு ஜனாதிபதியைத் தேடிச் சென்று உதவி கேட்டபோதுகூட அவர்களது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
நாம் இவற்றையெல்லாம் இங்கு நினைவுகூர்வதற்குக் காரணம் அரசாங்கம் ஹலால் சான்றிதழ் உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் மத உரிமை சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் பொடுபோக்கான போக்கையே கடைப்பிடித்து வருகிறது என்பதை உணர்த்துவதற்கேயாகும்.
நமது முஸ்லிம் சரணாகதி அரசியல்வாதிகள் அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ''''பள்ளிவாசல்கள் தாக்கப்படவில்லை... ஸியாரங்களை முஸ்லிம்கள்தான் உடைத்தார்கள்...'''' என பூச்சாண்டி காட்டுகிறார்களே தவிர சமூகத்தின் உரிமையைக் காப்பாற்ற வீதியில் இறங்கவில்லை.
தமக்கு பதவி வேண்டும்... பட்டம் வேண்டும்... சொகுசு வேண்டும்... அமைச்சரவையில் இடம் வேண்டும் ... என்பதற்காக அலரி மாளிகை வாசலில் இரவிரவாகக் காத்துக்கிடக்கும் அரசியல் தலைமைகள் ஹலால் விடயத்தில் மாத்திரம் ஓடி ஒளிந்துவிட்டார்கள். உலமா சபை இதுவரை மூன்று பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்தி ஹலால் பற்றி விளக்கம் சொன்னாலும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையைத் தானும் உருப்படியாக விடவில்லை. ஏனெனில் இது தேர்தல் காலம் அல்லவே.
அமைச்சரவையில் சம்பிக்க ரணவக்க இந்த விடயத்தை பேசினார் என்பதனால்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கு வாய்திறந்தார்கள். இன்றேல் அங்கும் ஹலால் விவகாரம் எடுபட்டிராது. அமைச்சரவை உபகுழுவும் அமைக்கப்பட்டிராது.
ஹலால் சான்றிதழை அரசாங்கமே பொறுப்பேற்று சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொறிமுறை ஒன்றை வகுக்க வேண்டும் என உலமா சபை கேட்டுக் கொண்ட போதிலும் பொதுபல சேனா அடங்குவதாக இல்லை.
உலமா சபைக்கு பதிலளிக்கும் வகையில் நேற்றைய தினம் பத்திரிகையாளர் மாநாட்டினை நடத்திய பொதுபல சேனா ''ஹலால்'' என்ற வார்த்தைக்கே இலங்கையில் இடம்கிடையாது என எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அத்தோடு நின்றுவிடாது ஷரீஆவின் கீழான முஸ்லிம் தனியார் சட்டம், இஸ்லாமிய வங்கி நிதி முறைமை, காதி நீதிமன்றம் என்பவற்றுக்கும் வேட்டுவைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இலங்கை முஸ்லிம்கள் குட்டக் குட்டக் குனிந்து போவார்கள் என்ற பொதுபல சேனாவின் அதீத நம்பிக்கையே இன்று அவர்கள் இப்படியெல்லாம் பேசுவதற்குக் காரண மாகும். அதற்கு நாமும் காரணமாகிவிட்டோம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இன்று ஹலால் விடயத்தில் இறங்கி வந்தவர்கள் நாளை ஷரீஆ விடயத்திலும் ஹிஜாப் விடயத்திலும் இறங்கி வருவார்கள் என பொதுபல சேனா எதிர்பார்க்குமானால் அது அவர்களது அறியாமையாகும்.
முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக மதிக்கும் இஸ்லாத்தில் கைவைப்பதற்கு எவருக்கும் இடம் கொடுக் க மாட்டார்கள். அவ்வாறான ஒருநிலை வருமானால் இந்தநாட்டின் நிலைமைகள் மிகப் பாரதூரமாகவே அமைந்துவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக.
-vidivelli.lk