ஹலால் பிரச்சினை ஆரம்பித்து இன்று இஸ்லாமிய ஷரியாக்களில் கை வைக்கிறார்கள் சில விஷமிகள். இதனால் முஸ்லிம்கள் நாம் ஆத்திரம் அடைகிறோம். ஆத்திரம் அடைய வேண்டும். முஸ்லிம் அல்லாத சகோதரர்களும்கூட இந்த ஈனச் செயலைப் பார்த்து கோபமடைகிறார்கள். இந்த கோபம் எங்கு சென்று முடியும் என்று உங்களுக்கு தெரியுமா…
- நீங்கள் சிந்திக்க வில்லையா…இத்தனை பிரச்சினைகளையும் அறிந்த அரசாங்க முஸ்லிம் தலைவர்கள் ஏன் மொனமாக இருக்கிறார்கள்.
- நீங்கள் சிந்திக்க வில்லையா…அப்பாவி முஸ்லிம் மக்களை வீதிக்கு இழுத்து, குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழும் இளைஞனை பலி கொடுப்பதற்கான திட்டமா..
- நீங்கள் சிந்திக்க வில்லையா…முஸ்லிம்கள் மத்தியில் விஷமிகளே ஆயுதங்களை வைத்து விட்டு இது தீவிரவாதம் என்று அறிவிப்பு செய்வதற்காகவா..
- நீங்கள் சிந்திக்க வில்லையா…கஞ்சா, அபின், தூள் போன்ற போதை வஸ்துக்களை உங்களுக்கு தெரியாமல் உங்கள் பைக்கட்டில் வைத்து இவர் போதை வியாபாரி என்று முத்திரை குத்தவா..
- நீங்கள் சிந்திக்க வில்லையா…எவ்வளவு நடந்தும் பொலிஸ் அதிகாரிகள் பொலிஸாக இல்லையே ஏன்
- நீங்கள் சிந்திக்க வில்லையா…ஆங்கங்கே முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றதே….
- நீங்கள் சிந்திக்க வில்லையா…இத்தனை ஆண்டுகளும் பிரிவினை இல்லாமல் இருந்தது, ஏன் இந்த திடிர் துவேஷம்?
- நீங்கள் சிந்திக்க வில்லையா…இதற்கு உந்து சக்தி யார்?
- நீங்கள் சிந்திக்க வில்லையா…இதன் நோக்கம் என்ன?
முஸ்லிம்களை தரையோடு முற்றாக அழிப்பதே இவர்களின் கொள்கை, இலட்சியம். நாளை ஆர்பாட்டம் என்ற பெயரிலே அனைவரும் வெளியிறங்கி போறாடுவீர்கள். உங்கள் அனைவரையும் படம் எடுப்பதற்கு ஒரு குழு தயாராக உள்ளதே. இது உங்களுக்கு தெரியுமா? இந்தக் குழு சாதாரன குழு அல்ல, இது ஒரு பாரிய குழு.
இவர்களின் நோக்கம் என்னவென்று தெரியுமா?
யார் யாரெல்லாம் இஸ்லாத்திற்கு ஆதரவாக கொடி தூக்கிறார்களோ அவர்களை தூக்குவதே இவர்களின் நோக்கம். பதிவில் உள்ள அத்தனை முகங்களையும் அடையாளம் கண்டு அனைவரையும் தூக்குவதற்கு (கொலை செய்வதற்கு) திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு தகவல் வந்திருக்கிறது.
முடிந்தால் இதனை ஆராயவும். இந்த ஆர்ப்பட்டம் தேவைதானா… சிந்தியுங்கள்.
இது கோழையல்ல. ஆர்ப்பட்டம் செய்தால் வீரமும் அல்ல. இப்போது புத்திக்கு வேலை கொடுக்க வேண்டும். சிந்தியுங்கள். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்பு உங்கள் குடும்பம், தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள். அனைவரையும் சிந்தியுங்கள். உங்களை கொலை செய்து விட்டு அவர்களே ஆயுதங்களை உங்களிடம் போட்டுவிட்டு இவன் தீவிரவாதி, அதனால் இவனை கொன்றோம் என்பர்கள். இதற்கு ஆமாம் போடு போலிஸ்.
இஸ்லாத்திற்காக தனது உயிரைப் பறிகொடுத்து அள்ளாஹ்வின் அருளை பெற விரும்பும் நீங்கள் இஸ்லாத்திற்கு பாரிய பிரச்சினை வரும் போது அதனை அமுல்படுத்துங்கள். தீவிரவாத திட்டத்துக்கு பலியாகாதீர்கள்.
சாதாரான மனிதாக வாழும் நீஙகள் தீவிரவாதியாக மாறாதீர்கள்!
அன்று தமிழ் மக்களை கொன்றனர்!நாளை முஸ்லிம்களையா?
பர்மா ஞாபகம் இருக்கட்டும். முஸ்லிம் நாடு உதவிக்கு வரும் என்று எண்ண வேண்டாம். உங்கள் மரணத்திற்கு பின் எந்த முஸ்லிம் நாடு உதவிக்கு வந்தால்தான் என்ன….. புரிகிறதா…
இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சட்டத்திற்கு கட்டுப்படுங்கள். வேறு எந்த அரசியல் வாதியோ, பிரதேசவாதியோ, கொள்கைவாதியோ, சண்டியரோ இவர்களுக்கு இந்த இடத்தில் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. மார்க்க விடயம் என்ற அடிப்படையில் உலமாக்களின் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவது அத்திய அவசியமாகும். இதனைத்தான் இஸ்லாம் கூறுகிறது என்பதனை ஒரு போதும் மறந்திட வேண்டாம்.
பொறுமையாக செயற்படுங்கள். நிச்சயமாக இன்ஷா அள்ளாஹ், அள்ளாஹ் அனைத்து முஸ்லிம்களையும் பாதுகாப்பான்.
இந்த தகவலை ஏனைய சகோதரர்களுக்கும் அவசரமாக தெரியப் படுத்துங்கள்.
அப்துல் பிர்தவ்ஸ்
http://www.dawahworld.com