சிறுவயதிலிருந்தே நான் பெளத்த மதத்தை மிகவும் நேசித்தேன். புத்தரின் வாழ்க்கை வரலாறு, ஜாதகக் கதைகள் மற்றும் போதனைகளை நான் அதிகமாக வாசித்தேன். அதன் விளைவாக நான் பெளத்த மதத்தை தழுவினேன் என அண்மையில் தலங்கம நாகித்த என்ற பெயரில் பிக்குவாக துறவறம் பூண்ட மொஹம்மட் சப்ராஸ் ஆப்தீன் சிங்கள ஊடகமொண்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இஸ்லாத்தில் சட்டங்கள் அதிகம். அதில் கட்டாயம் தொழ வேண்டும் என்றிருக்கிறது. எனினும் பெளத்தத்தில் அப்படியில்லை. சட்டமொன்றினை எங்களுக்கு விதிக்க யாருமில்லை என்பதினால் நான் ஆசையோடும் கெளரவத்துடனும் நான் புத்தரை வணங்குகிறேன். பன்சலையில் எனக்குக் கிடைக்கும் அமைதி பள்ளிவாசலில் இல்லை.
எல்லோருடனும் இணைந்து இறைவனை வணங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு போகவேண்டி ஏற்படுவதால அந்நாளில் நான் வீட்டிலிருந்து வெளியேறி வேறு எங்காவது சென்று மாலை வேளையிலேயே வீட்டுக்கு வருவேன்.
பன்சலையில் இருக்கும் போது எனக்கு எவ்விதமான கவலையும் இல்லை. மன அமைதிக்கு துறவறம் பூணுவது சிறந்த வழியாகும். ஏதேனும் கவலைகள் ஏற்படின் புத்தரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் அது மறைந்து விடும். என தெரிவித்துள்ளார்.
-vidivelli.
இஸ்லாத்தில் சட்டங்கள் அதிகம். அதில் கட்டாயம் தொழ வேண்டும் என்றிருக்கிறது. எனினும் பெளத்தத்தில் அப்படியில்லை. சட்டமொன்றினை எங்களுக்கு விதிக்க யாருமில்லை என்பதினால் நான் ஆசையோடும் கெளரவத்துடனும் நான் புத்தரை வணங்குகிறேன். பன்சலையில் எனக்குக் கிடைக்கும் அமைதி பள்ளிவாசலில் இல்லை.
எல்லோருடனும் இணைந்து இறைவனை வணங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு போகவேண்டி ஏற்படுவதால அந்நாளில் நான் வீட்டிலிருந்து வெளியேறி வேறு எங்காவது சென்று மாலை வேளையிலேயே வீட்டுக்கு வருவேன்.
பன்சலையில் இருக்கும் போது எனக்கு எவ்விதமான கவலையும் இல்லை. மன அமைதிக்கு துறவறம் பூணுவது சிறந்த வழியாகும். ஏதேனும் கவலைகள் ஏற்படின் புத்தரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் அது மறைந்து விடும். என தெரிவித்துள்ளார்.
-vidivelli.