சிரிய கிளர்ச்சிப்படை துருக்கி எல்லைக்கு அருகேயுள்ள முக்கிய நகரான ரக்காஹின் வடபகுதி உட்பட பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தது.
நேற்றுமுன்தினம் ரக்காஹ் நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர் அங்கிருந்த ஜனாதிபதி அசாத்தின் மிகப்பெரிய போஸ்டரைக் கிழித்து எறிந்ததுடன் காலம் சென்ற அவரின் தந்தையின் சிலையையும் உடைத்து சேதமாக்கினர்.
மேலும் இந்நகரில் உள்ள சிறையில் இருந்து அம்மாகாண கவர்னர் உட்பட பல முக்கிய கைதிகளையும் கிளர்ச்சிப் படையினர் விடுவித்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ரக்காஹ் நகரத்தின் பெரும்பான்மைப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் கடந்த 2 வருட கால யுத்தத்தில் முதன் முதலாக ஒரு முக்கிய நகரைத் தம் வசம் கொண்டுவந்து அசாத்தின் அரசாங்கத்தைத் தூக்கி எறிய தாம் வல்லவர்களே எனப் புரட்சிப் படையினர் நிரூபித்திருப்பதாகக் கருதப்படுகின்றது.
மேலும் இந்நகரில் உள்ள சிறையில் இருந்து அம்மாகாண கவர்னர் உட்பட பல முக்கிய கைதிகளையும் கிளர்ச்சிப் படையினர் விடுவித்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ரக்காஹ் நகரத்தின் பெரும்பான்மைப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் கடந்த 2 வருட கால யுத்தத்தில் முதன் முதலாக ஒரு முக்கிய நகரைத் தம் வசம் கொண்டுவந்து அசாத்தின் அரசாங்கத்தைத் தூக்கி எறிய தாம் வல்லவர்களே எனப் புரட்சிப் படையினர் நிரூபித்திருப்பதாகக் கருதப்படுகின்றது.