மத்திய கிழக்கு நாடுகளில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் மரங்களைப் போன்று கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள 79 பேரீச்சம் மரங்களும் பூத்துக் காய்க்க ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தில் வீதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்;சியினால் 79 பேரீச்சம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகம் உஷ்ணம் நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்சம் மரங்கள் பூத்தும், காய்த்தும் வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
கடந்த வருடத்தை விட, இவ் வருடம் அதிகமான மரங்களில் பேரீச்சம் பழங்களை அறுவடை செய்ய முடியுமென பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த 79 பேரீச்சம் மரங்களும் காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகம் உஷ்ணம் நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்சம் மரங்கள் பூத்தும், காய்த்தும் வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
கடந்த வருடத்தை விட, இவ் வருடம் அதிகமான மரங்களில் பேரீச்சம் பழங்களை அறுவடை செய்ய முடியுமென பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த 79 பேரீச்சம் மரங்களும் காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.